சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மே 14) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 925ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

இன்று 10 பேர் கோரோனா தொற்றுக்குள்ளாகியமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 445 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

471 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.