யாழில் இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் தாக்கிய நபர்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அங்கே வந்த 3 இளைஞர்கள் குறித்த ஆண் நண்பர்கள் இருவரையும் அச்சுறுத்தி அங்கிருந்து அனுப்பிவிட்டு. இந்த சிறுமிகளோடு பாலியல் துஷ்பிரோயகம் செய்துள்ளார்கள்.

பின்னர் நல்லவர்கள் போல நாடகம் ஆடி. அவர்களை ஒரு மரத்தில் கட்டிவைத்து, ஊர் மக்களை கூட்டி, இவர்கள் தாகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி பச்சை மட்டையாயால் அடித்தும் உள்ளார்கள்.

இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கி, நல்ல பிள்ளைகள் போல நடித்து குறித்த மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.