99 பேர் உ யிரிழந்த விமான விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விமான பணிப்பெண்! எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 99 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானப் பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று லாகூரில் இருந்து கராச்சி விமான நிலையத்தில் தரையிரங்க முற்பட்ட போது, எதிர்பாரதவிதமாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதில் 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் Madiha Iram என்பவர் பணிப்பெண்ணாக செல்ல வேண்டிய நிலையில் அவர் அதில் அன்று செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த விமானத்தில் பணிப் பெண்ணாக Madiha Iram செல்லவிருந்தார்.

ஆனால், பணிப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக Anam Maqsood என்ற பணிப் பெண் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் Anam Maqsood உயிரிழந்தார். ஒரு வேளை பணிப் பட்டியலில் மாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால், குறித்த விமானத்தில் பணிப்பெண்ணாக Madiha Iram செல்ல வேண்டியிருந்திருக்கும், இவர் இந்த விபத்தில் சிக்கியிருப்பார்.

எனினும் அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.