இலங்கையில் சற்று முன்னர் திடீரென அதிகரித்த புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் இன்று (மே 24) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 117ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

இன்று மாலை 5 மணி வரை 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் முல்லேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இதுவரை 674 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.