கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிங்கநாயகம் செபமலை (80) என்பவர் கடைசியாக மே 22ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு Sentinel Rd & Finch Ave பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த பதிவில் அவரின் அங்க அடையாளங்களும் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.
அதன்படி 6 அடி உயரம் கொண்ட சிங்கநாயகம் காணாமல் போன அன்று கருப்பு நிற பேண்ட், நீல நிற சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
MISSING MAN:
Singanayagam Sebamalai, 80
– last seen on May 22 at 6:30 p.m., in the Sentinel Rd & Finch Ave area
– described as 6'0, 170 lbs,
– last seen wearing black winter hat, blue jacket, black pants, black shoes#GO947553
^ep2 pic.twitter.com/hBEhq2EoS7— Toronto Police Operations (@TPSOperations) May 23, 2020
இந்நிலையில் மாயமான சிங்கநாயகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தனியாக வெளியிட்டுள்ள பதிவில் தற்போது தெரிவித்துள்ளனர்.
இதோடு இந்த விடயத்தில் உதவியவர்களுக்கு நன்றி எனவும் கூறப்பட்டுள்ளது.