இலங்கையில் ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று! இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த விபரம்

இலங்கையில் இன்று மட்டும் கொரோனா தொற்றுடன் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றுடன் சேர்த்து கடந்த ஐந்து நாட்களில் இலங்கையில் 406 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்ட 150 பேரில் 97 பேர் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், ஏனைய 53 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில், 727 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 732 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.