யாழ் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்….!

யாழ்ப்பாணம்-வலிகாமம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து மோட்டார் வெடிமருந்துகள் உட்பட பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் கிணத்தை சுத்தப்படுத்தும் பொழுது குறித்த வெடி பொருட்கள் காணப்பட்டதாக காவல் துறையினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கிணற்றில் இருந்து 81 மில்லிமீற்றர் நீளம் கொண்ட மோட்டார் வெடிபொருள் 50ம், 60 மில்லமீற்றர் நீளம் கொண்ட மோட்டார் வெடிபொருள் 33ம் ,06 தோட்டாக்களும் ,12 ரவைகளும் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த வெடிபொருட்கள் யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் உபயோகப்படுத்திப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.