அச்சு அசலாக அம்மா போலவே!… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் தேவயானி.

நம்ம வீட்டு செல்லப்பிள்ளை என்று கூறும் அளவுக்கு அனைவரது வீட்டுக்கும் சென்று குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.

அழகான சிரிப்பாலும், அசத்தலான நடிப்பாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் தேவயானி.

புகழின் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் தேவயானி, தன்னுடைய சொந்த ஊரில் பண்ணையுடன் கூடிய வீடொன்றை கட்டியுள்ளார்.

அவ்வப்போது அங்கு சென்று நாட்களை கழிப்பதும் இவர்களது வழக்கம் தான், தற்போது இவரது இரு மகள்கள் பெரியவர்களாக வளர்ந்துவிட அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் ஒருவர் அச்சு அசலாக தேவயானி போலவும், மற்றொருவர் ராஜ்குமார் போலவும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.