ஆறுமுகம் தொண்டமான் இறந்த போது இடம் பெற்ற மிக மோசமான சம்பவம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் நேற்றைய தினம் அக்கினியுடன் சங்கமமாகியது.

இச் சம்பவம் பொதுவாக மலையக மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தச் சூழலில் சிலர் அழுவதற்கு சொல்லிக் கொடுத்து தொண்டமானின் ஆதரவாளர்கள் அழுவதற்கு சொல்லிக் கொடுத்து அழ வைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக்கின்றமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் மக்களை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து அதனை அரசியலாக்குவது மக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மரண வீட்டை தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது மிக மோசமான சம்பவம் என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.