இரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி… காலையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சிக்கிய அப்பாவிற்கு எழுதிய கடிதம்

மத்தியபிரதேசத்தில் இரவு குடும்பத்துடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு 12ம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ(19) என்ற மகளும், 17 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு உணவை முடித்துவிட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அறைக்குள் உறங்க சென்றுள்ளார்.

காலையில் வெகுநேரமாகியும் கதவினை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக அவதானித்த தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து மகளை மீட்டு, பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறப்பதற்கு முன்பு ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், அப்பாவுக்கு இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டிருந்த ஜெயஸ்ரீ, உன் மனைவியையும், மகளையும் எனக்கு பிடிக்கவில்லை.

வீட்டில் தனக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, தன்னை யாரும் விரும்பவில்லை. அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியுள்ளார்.

அதாவது, தனது தாய் மற்றும் சகோதரித்தான் தனது மரணத்திற்கு காரணம் என்பதுபோல் ஜெயஸ்ரீ அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு பொலிசார் ஜெயஸ்ரீயின் தாய் மற்றும் மகளை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.