பற்றியெரியும் அமெரிக்கா… மரணமடைந்த கருப்பினத்தவரின் உடற்கூராய்வு முடிவு வெளியானது

அமெரிக்கா முழுவதும் கலவர பூமியாக மாற காரணமான கருப்பினத்தவரின் மரணம் தொடர்பில் அதிமுக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலால், இந்த போராட்டம் மேலும் இறுக்கமடையும் என அரசியல், சமூக நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

மேலும் உறுதியான ஒரு முவெடுக்க முடியாமல் ஜனாதிபதி டிரம்ப் பதுங்கு குழிக்குள் மறைந்திருப்பதும் கலவரம் மேலும் நீடிக்க வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

தற்போது ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பில் வெளியான உடற்கூராய்வு முடிவுகளில்,

ஜோர்ஜ் ஃபிலாய்ட் asphyxia காரணமாக அதாவது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.