வெளிநாட்டில் வசிக்கும் கணவன்! வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… அதிகாலையில் மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற மனக்கவலையில் கேரளாவில் வசிக்கும் மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பிரேமா கோவிந்த் (40). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமா இரு தினங்களுக்கு முன்னர் இரவு சாப்பிட்டு விட்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறைக்கு தூங்க சென்றார்.

பின்னர் விடிகாலையில் பிரேமாவின் மாமியார் சவுதமினி தூக்கத்தில் இருந்து எழுந்த போது வீட்டு சமையலறை திறந்திருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்தார்.

அப்போது அந்த இடத்தில் பிரேமா தீயில் கருகி இறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு மாமியார் அதிர்ச்சியில் உறைந்தார், அவர் அருகில் மண்ணெண்ணெய் போத்தல் இருந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் பிரேமாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் சவுதியில் பிஜூகுமார் அறையில் தங்கிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிஜூகுமார் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதை அறிந்த பிரேமா மிகுந்த மனக்கவலை அடைந்தார். உடன் பணியாற்றும் ஆசிரியையிடம் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இதோடு மனநலப்பிரச்சனைக்கு பிரேமா சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையிலேயே கணவரை நினைத்து கவலைப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பிரேமா எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனநிலை பிரச்சனையில் இருந்து தன்னால் மீள முடியவில்லை எனவும் கணவருக்கு தான் தொல்லையாக இருக்க விரும்பவில்லை எனவும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிஜூகுமார் சவுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மனைவியின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.