20 வயது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்திய தந்தை! விசாரணையில் வெளிவந்த காரணம்

தமிழகத்தில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (20). ரோகிதா காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.

நேற்று அதிகாலை, தமிழரசன் எழுந்து பார்த்த போது, மகளை காணாமல் தேடியுள்ளார், பின், படுக்கையறையில் பார்த்த போது, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் கத்தியபடி அழுதார்.

தகவலறிந்த பொலிசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் விசாரித்தனர். அதில் தெரியவந்த விபரம் வருமாறு:

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.