யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த கடத்தலில் தந்தை சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.