ஸ்ரீலங்காவில் சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 8 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1789ஆக பதிவாகி உள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு839 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.