நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்!


‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் பாடும் சிவபெருமான் நல்லூரில் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி நல்கினார்.

அநாதையான வந்திக்கிழவியின் பொருட்டு இறைவன் செய்த அத்திருவிளையாடல் நேற்று(29.12.2017) காலை நல்லூர் சிவன் கோயிலில் உற்சவமாக நிகழ்த்தப்பட்டது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்