அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தமிழ் நடிகை! படுக்கையறையில் போலீசாருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி? கடும் சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115-வது தெருவில் ஒரு வீட்டிலிருந்து இருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

பூட்டி கிடந்த வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது இரண்டு பேர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

படுக்கையறையில் மெத்தையில் ஒரு ஆண் சடலமும் மற்றொரு அறையில் பெண் சடலமும் கிடந்தது. 45 வயதிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் என இருவரின் உடல்களையும் கைப்பற்றிய கொடுங்கையூர் போலீசார் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் என்ற அடையாள அட்டை இருந்தது.

மேலும் அதில் ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இருவரும் முத்தமிழ் நகரில் உள்ள வீட்டில் 7 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த விசாரணைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.