கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்! (Video)

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப்பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பவுல் ஜான்சன் என்பவரே 3ஏ பெறுபேற்றை பெற்று அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் தனதாக்கியுள்ளார்.
பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.