ஆலயங்களில் 50 பேருடன் வழிபாடுகளை நடத்த வெள்ளி முதல் அனுமதி

ஆலயங்கள் உள்பட மத வணக்க ஸ்தலங்களில் வழிபாடுகளை நடத்த நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோவிட் -19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 பேருடன் வழிபாடுகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.