இத்தாலி நாட்டில் வாழும் சட்ட விரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகம் ஆனவர்களுக்கு வதி விட அனுமதி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இத்தாலி உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டம் மூலம் இந்த வதிவிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. 8 வருடங்களின் பின்னர் செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் மூலம், விவசாயம், மீன் பிடி, வீட்டுபணிசேவை மற்றும் மேலும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சேவை யோசனை ஊடாக தொழில் ஒப்பந்த செய்துக் கொள்வதன் மூலம் இந்த வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்குள் இந்த வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இத்தாலி உள் விவகார அமைச்சு தெரிவித்து உள்ளது.
இத்தாலியில் முன்னெடுக்க உள்ள இந்த நடவடிக்கையின் கீழ் அந்த நாட்டில் வதிவிட அனுமதி இன் றி வசிக்கும் இலங்கையர்கள் 15 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியில் உள்ள சட்ட விரோத இலங்கையர்களுக்கு புதிய விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக இத்தாலி நகரத்தில் உள்ள இலங்கை தூரகம் மற்றும் மிலான் நகர உயர் ஸ்தானிகரலாயத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விமான அனுமதிபத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அவசிய ஆலோசனைகளை தூதரக இணையத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இத்தாலியின் பணி ஆற்றும் இலங்கை தூதுவர் சிசிர சேனா ரத்ன தெரிவித்து உள்ளார்.
நிலவும் நிலைமைக்கு அமைய விமான அனுமதி பத்திரம் விண்ணப்பிக்கும் போது ஜுன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்களை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆவணங்களை ஒப்படைத்த நாள் முதல் குறைந் தது 10 நாட்களுக்குள் வதிவிட அனுமதி விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்து உள்ளது.