யாழில் பல புதுமையான படைப்புக்களை வெளிப்படுத்தி வரும் “யாழி”

யாழில் இளைஞர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் “யாழி” Youtube Channel உருவாக்கப்பட்டுள்ளது. தம்மை இராவணபுத்திரர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பல புதுமையான படைப்புக்களை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் பலராலும் விரும்படுகிறது இராவணபுத்திரர்களின் யாழி. அண்மையில்
கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த ” karthik dails seitha en ” திரைப்படத்தைத் தழுவி தமது பாணியில் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையருக்காக இவன் தந்தை என்நோற்றான் எனும் தலைப்பிலான பாடல் ஒன்றை வெளித்தர காத்திருக்கின்றனர். புதுமுயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களை உள்வாங்குவதுடன் படைப்பியல் ரீதியில் அவர்களுக்கான முழுசுதந்திரத்தையும் வழங்கி பல்வேறுவகையான காத்திரமான படைப்புக்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.