கதிரையிலிருந்து விழுந்த சிறுவன் 5 நாட்களின் பின் பலி! யாழில் சோகம்

யாழில் கதிரையிலிருந்து விழுந்த சிறுவன் 5 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக விழுந்துள்ளான்.

சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த சிறுவனின் தலைப்பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக நேற்றைய தினம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

அத்துடன் சிறுவனுக்கு காய்ச்சலும் இருந்துள்ள நிலையில் சிறுவனை பெற்றோர் நேற்று மதியம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் பரிதாமாக உயிரிழந்துள்ளார்.