இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பரிதாபச் சாவு; முகமாலையில் பயங்கரம்

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்தார்.

கிளிநொச்சி முகமாலை – கிளாலிப்பகுதியில் கள்ளமணல் ஏற்றிச்சென்றவர்கள்மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மைக்காலமாக முகமாலை – கிளாலிப் பகுதியில் கள்ளமணல் எடுப்பது அதிகரித்திருப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.