நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் தொடர்பில் பிரதமர் மகிந்த விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சப தொடக்க நாளில் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படையினர் பாதணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் நடமாடி இருந்தனர்.

அது தொடர்பில் ஊடகங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்த பிரமர் மஹிந்த ராஜபக்ச வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை தொலைபேசி ஊடாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு பணித்துள்ளார்.

அத்துடன் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து இன்று காலை விசாரணை நடத்தியிருப்பதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும்,

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது என உறுதி அளித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.