யாழில் மூன்று மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

கடந்த 4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பின்னார் இருந்து சென்ற இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கோண ரஞ்சன் மதுசன் வயது 20 கரணவாய் தெற்கு என்ற இளைஞனே இவ்வாறு சிகிறையால் வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் மாணவனாவார்.

இந்த நிலையில் அவருடைய இறப்பு பிரதேச மக்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.