வீட்டில் கதறிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை… அவதானித்த அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கணவன் மனைவி இருவரும் தனி தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது குழந்தை தனியாக அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரது மனைவி சந்திரிகா. குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனியே வசித்துவந்துள்ளனர். இதனிடையே இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பிரின்ஸ் மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.

வழக்கம் போல் நேற்றும் கணவன் மனைவியை இருவருக்கும் இடையே சண்டை வந்த நிலையில் அறைக்குள் சென்ற பிரின்ஸ் மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கணவன் வெளியே வராத நிலையில், ஜன்னல் வழியாக சந்த்ரிகா பார்த்தபோது கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார் சந்த்ரிகா. இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது சந்திரிகாவை காணவில்லை, அவர்களது ஒரு வயது குழந்தை மட்டும் தனியாக நின்று அழுதுகொண்டிருந்தது.

இதனை அடுத்து வீட்டில் சோதனை செய்தபோது கணவன் ஒரு அறையிலும், சந்திரிகா மற்றொரு அறையிலும் தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது குழந்தை அநாதை ஆன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.