இலங்கையின் வானொலி அறிவிப்பாளர் மரணம்.. தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்…!

கொரோனா வைரஸ் ஆனது உலகையே புரட்டிபோட்டிருக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

இதையடுத்து சமீப நாட்களாகவே திரைப்பிரபலங்களின் மரணங்கள் அதிகரித்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளர் மற்றும் திரைப்படக் கலைஞரான எஸ். நடராஜ சிவம் நேற்றிரவு காலமாகியுள்ளார்.

நடா அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார் அவருக்கு வயது 74.

மேலும், அவரின் மறைவை ஒட்டி பலரும் தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர். உலக புகழ் பெற்ற அறிவிப்பாளரான பி.எச். அப்துல் ஹமீது தனது அனுதாபத்தை பேஸ்புக் ஊடாக வெளியிட்டுள்ளார். என் ஆருயிர் தோழனை இழந்தேன் என்ற தலைப்பில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.