பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு! முக்கிய தலைகள் சிக்குமா?

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இதன்போது ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை அரச வங்கிகளில் உயர் மட்ட முகாமைத்துவத்தில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.