யாழ். தேர்தல் பிரச்சாரத்தில் த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி! ஓட.. ஓட.. விரட்டும் பகீர் காணொளி

வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன.

இதோ ஒரு சம்பவம்:

வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி வேட்பாளரும், ஆதவாளரும் விரட்டப்படும் காட்சி:

பிரச்சாரம் செய்யச் சென்ற குறித்த த.தே.ம.முன்னணியினருக்கு இவ்வாறான விளக்கமொன்றை இளைஞரொருவர் வழங்குகிறார்.

அதேபோன்று தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்..

இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் வருவார் என்ற விடயம்.

அத்துடன் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சென்று பாருங்கள் ரெக்கோட் காணப்படுகிறது. உங்கள் கதைகள் அனைத்தையும் விடுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் கதைகளும் எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin-