யாழ்ப்பாணத்தில் இன்று விபத்தில் சிக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணித்த பாதுகாப்பு வாகனம் ஒன்று கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியிருக்கின்றது.

ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனத் தொடரணியில் பயணித்த வாகனமே விபத்தில் சிக்கியிருக்கின்றது.

வீதி ஓரத்தில் காணப்பட்ட பாதுகாப்பு கற்கள் மீது வாகனம் மோதியே விபத்து நிகழ்ந்திருக்கின்றது.

வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ள போதிலும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரியவருகிறது.