கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட முக்கிய வீதி! – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அந்த பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார்.

அவரது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அந்த பகுதி தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.