சொத்துக்களுக்காக இலங்கை பெண் கணவனிற்கு செய்த பாதக செயல்! வெளியான அதிர்ச்சித்தகவல்

வெ ளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை, இலங்கைப்பெ ண் கூலிப்ப டையை ஏவி கொலை செய்தமை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின், தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப், அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து திருமணம் செய்தார்.

அதன்பின்னர் குவைத்திலிருந்து அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அசிலாவை பிரிந்து யூசுப் வாழ்ந்து வந்தார்.

கடந்த 25ஆம் திகதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் பொலிஸ்நிலயத்தில் ஆஜரான அசிலா, கணவன் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறினார்.

எனினும் அவரிடம் பெண் பொலிசார் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் யூசுப் கொலைக்காண காரணம் வெளியானது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார். இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த தகராறில் அவரை பிரிந்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவரை தனது நண்பர்கள் மூலம் கூலிப்படையை அழைத்து யூசுப்பை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.