தூக்கில் தொங்கிய தாய்.. கீழே குழந்தையின் சடலம்.. கணவர் செய்த காரியம்!

கடலூரில் திருமணமான இரண்டு வருடத்தில் பெண் தூக்கில் தொங்கியும், அவரது ஒரு வயது குழந்தை கீழே இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பிரியங்கா என்ற பெண்ணைக் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் ஒரு வயதில் மீன லோச்சினி என்ற பெண்குழந்தையும் இருந்துள்ளது.

குழந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில், குழந்தையும், தாயும் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தை கீழேயும் இறந்து கிடந்துள்ளது. இவர்களின் இறப்பு எப்படி நடந்தது என்பது தெரியாத நிலையில், கொலையா? தற்கொலையா? என்று பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் பிரியங்கா ஆர்வமாக செய்து வந்த நிலையில், இந்த மர்ம மரணம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குழந்தையின் பிறந்தநாளுக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு கூறிய பிரியங்காவின் பேச்சை கணவர் காது கொடுத்து கேட்காமல் இருந்ததாலும், மேலும் பல பெண்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்ததால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகின்றது.