உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.
இதனால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
இதனையடுத்து மாஸ்க்கிலும் பல வித மாடல்கள் வந்துவிட்டன. உடைக்கு ஏற்றார் போலவும் டிசைன் வந்துட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் ஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் ( இந்திய ரூபாய்) தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவரே அவர்.
தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் மாஸ்கையும் தங்கத்தில் செய்து அணிந்துள்ளார்.
சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பிலான மாஸ்க், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்குமா என்பது சந்தேகம் தான்,. இருந்தாலும், அதில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளதால், சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என ஷங்கர் தெரிவித்துள்ளார் .