யாழ்ப்பாண மாநகர வர்த்தகர்கள் முழுநேர கடையடைப்பு முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து முழுநாள் கடையடைப்பை யாழ்ப்பாண வர்த்தகர்கள் முன்னெடுத்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று அரைநாள் கடையடைப்புக்கு வடக்கு மாகாண சபை சார்பில் முதலமைச்சரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும் யாழ்ப்பாணத்தில் இன்று முழுநாள் கடையடைப்பை வர்த்தகர்கள் முன்னெடுத்தனர். நண்பகலுக்கும் பின்னர் சில வர்த்தக நிலையங்களே திறக்கப்பட்டிருந்தன.