பொதுமக்களிடம் பொலிஸார் அவசர கோரிக்கை! சரணடைந்தாக தகவல்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் , தலைமறைவாகியுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர கைது செய்ய பொதுமக்களின் உதவியை சிஐடி நாடியுள்ளது.

வெரிகாவத்த கங்கனமலக சமன் வசந்த குமார என்பவரே இவ்வாறு சிஐடி ஆல் தேடப்படுகிறார்.

189, கிரிகட்ட, வேலிவேரிய என்ற முகவரியை சேர்ந்த குறித்த சந்தேக நபர், கடந்த சில தினங்களாக தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் 071 859 1767 அல்லது 0112 422 176 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

சரணடைந்தார் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர்

தலைமறைவாக இருந்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இன்று சரணடைந்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் வசந்தகுமார மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மீள விற்பனை செய்தது, போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து வாங்கிய துப்பாக்கிகளை பாதாள உலகக்குழுவிடம் விநியோகித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் இன்று அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், கடவத்த பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.