கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துக நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இமறு மாலைவரை 339 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கோரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை கைதியுடன் மூன்று மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்கலாக 283 பேருக்கு பிசிஆர் பரிசோதனையின் மூலம் இன்று கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.