பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை

நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதா என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.