நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பேரிடியாக வந்துள்ள செய்தி

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் நாடு திரும்பும் நடவடிக்கை ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறினார்.

இதேவேளை இங்கிலாந்திலிருந்து 234 பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 229 பயணிகளும் நேற்று தீவை அடைந்தனர்.

கோவிட் -19 தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதுடன், தாம் நாட்டுக்கு வர அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை கட்டம் கட்டமாக இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரிப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.