ஸ்ரீலங்காவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்று அவசர கலந்துரையாடல்

ஸ்ரீலங்காவில் திடீரென கொரோனா ரைவஸ் பரவலின் அதிகரிப்பை அடுத்து இன்று அது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது பொதுபோக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவும் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.