தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இருவருக்கு கொரோனா

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இரண்டு இராணுவத்தினருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அக்குரெஸ்ஸ பொது சுகாதார பரிசோதகர் ஜீ.ஏ.பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்திய விடயங்களுக்கு அமைய அக்குரெஸ்ஸ நாவல, ஹேனேகம, பலபாதா பிரசேதங்களில் உள்ள இந்த இராணுவத்தினரின் குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பியகம தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர குறித்த கொரோனா தொற்றாளர்களிடம் பழகிய வர்த்தக நிலைய உறுப்பினர்கள், தனியார் வகுப்புகள் மற்றும் விவசாய கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட 50 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த பிரதேசத்தில் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்த சிலருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் கூறியுள்ளார்.