கடன் தர மறுத்த காதலியின் முகத்தில் சானிடைசரை ஊற்றி கொழுத்திய காதலன்.. அதிர்ச்சி சம்பவம்!

சண்டிகர் மாவட்டத்தின் உள்ள ஷில்லாங்கில் வசிக்கும் 22 வயது இளம்பெண், அப்பகுதியில் வசிக்கும் நரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த வாரம் நரேஷ் என்பவர் தன் காதலியிடம் ரூ .2,000 கடனாக கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்மணி தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன் காதலியின் முகத்தில், சானிடைசரை ஊற்றி லைட்டரைப் பயன்படுத்தி நெருப்பு வைத்துள்ளார்.

சானிடைசரில் இருக்கும் ஆல்கஹால் காரணமாக காதலியின் முகம் பற்றி எரிந்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் பாதிக்கப்பட்ட இளம்பெண் சண்டிகருக்கு குடிபெயர்ந்ததாகவும், அதன்பின்தான் புரேலில் இருந்த நரேஷுடன் காதல் வயப்பட்டு, ஒன்றாக வாழத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் காதலர் நரேஷ் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார். மேலும் நரேஷ் இதற்கு முன்பே அடிக்கடி பணத்திற்காக தன்னைத் தாக்கியதாக அவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனிடையே நரேஷ் கைது செய்யப்பட்டார்.