கொரோனா சந்தேகம்! யாழ் கைதடி மாணவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் கைதடி சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் கொரோனா சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைகழகத்தின் சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் பொலன்னறுவையை சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் கொரோனா சந்தேகத்தில் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் கொரொனா அறிகுறியுடன் எழுவைதீவிலிருந்து அனுமதிக்கப்பட்ட பொலன்னறுவையை சேர்ந்தவ நபரிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.