மட்டக்களப்பு கிறிஸ்தவர்களிற்கு இடியாய் வந்துள்ள செய்தி! மனம் மாறாதவர்கள் உடன் படியுங்கள்

நீங்கள் எம்மதமாக இருப்பினும் பைபிள், வேதாகமம், பகவத்கீதை,குறான் என எல்லா வேத நூல்களும் அறம் ஒன்றையே வலியுறுத்துகின்றன.

அந்த புனித தலத்தில் வைத்தே பலியாக்கப்பட்ட ஐயா ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை நம் எல்லோர் மனங்களிலும் மாறத வடுவாக இன்றளவும் நிலைத்து இருக்கிறது இதற்கு காரணமான அந்த பிள்ளையானை நாம் மறந்தால் நாமும் அக்கொலைக்கு துணை போனவர்களே.

அவர் முன்புதானே கொலை செய்தவர் இப்போது இல்லலையே என்கிற பலரது வாதங்களை பார்க்க முடிகிறது சமூக வலைத்தளங்கள் ஊடாக. இது எவ்வாறான மனநிலை என்பது புரியவில்லை

ஒரு (பல) கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடிகிறது உங்களால்?

அது யாருக்கோ என்கிற மன நிலைதானே……மனிதம் மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றதையே இவ்வாறான மனோபாவம் உணர்த்துகிறது.

பிள்ளையானை ஆதரிக்கும் பலரது கருத்தாக இருப்பது எனக்கொரு வேலை ஆகவேண்டி உள்ளது அதனால் ஆதரிக்கிறேன் என்பதுவே.

இப்படியானவர்களை பார்க்கின்ற வேளைகளில் பசிக்காக உடம்பை விறபவர்கள் உங்களை விட எத்தனையோ மேல் என்கிற எண்ணமே தோன்றுகிறது.

தனக்குவந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் எனும் முது மொழிக்கிணங்க பாதிக்கப்பட் எண்ணிலடங்கா குடும்பங்களின் மனக்குமுறலை யார் அறிவார்…..?

இந்த பாதக செயலை புரிந்த கூட்டத்துக்கு துணைபோகும் ஒவ்வோர் உன்மை கிறிஸ்தவனும் யேசுவை காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துவுக்கு நிகரானவர்களே.

மற்றொரு நேரடிச் சாட்சியம்

24-12-2005 அன்று நள்ளிரவில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு வழிபாட்டுக்காக வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை கொலை செய்வதற்கு TMVP பிள்ளையான் குழுவை அசராங்கம் பயன்படுத்தியது.

இந்த கொலைக்காக ஒரு வானில் அதன் சாரதி, மேலும் மூவர் உட்பட பிள்ளையான் மற்றும் சித்தா மாஸ்டர் என அழைக்கப்பட்ட இரு TMVP உறுப்பினரை ஏற்பாடு செய்தது புலனாய்வுப் பிரிவு தலைமையிலான குழு.

இதில் பிள்ளையான் நேராக ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.க்கு அருகாமையில் சென்று அவரைச் சுட்டுக்கொன்றார். சிங்கள புலனாய்வு உறுப்பினர் மற்றும் சித்தா மாஸ்ரர் அருகில் தயார் நிலையில் இருந்தனர் குறி தவறினால் துப்பாக்கிச் சூடு நடாத்துவதற்கு.

பிள்ளையானிற்கு துணையாக மேற் கூறிய சித்தா மாஸ்ர் மற்றும் சிங்கள புலனாய்வாளர் சென்றிருந்தார்.

பிள்ளையானின் துப்பாக்கிச் சூட்டில் பரராஜசிங்கம் எம்.பி. சில வேளை தப்பினால், சித்தா மாஸ்ரர் அல்லது புலனாய்வாளர் சுட்டுக்கொள்வார் என்பதே திட்டம்.

வெளியே அதிக அளவு பாதுகாப்பு இருந்தும் யாரும் எதிர் தாக்குதல் நடத்தவில்லை. இராணுவ புலனாய்வு நபர் சரியான பாதுகாப்பினை பிள்ளையான் – சித்தா மாஸ்ரருக்கு வழங்கியிருந்தார்.

இதுவும் அல்லாமல் தேவாலயத்தின் எதிர்ப்புறத்திலிருந்த கட்டடம் ஒன்றின் மீதும் பிள்ளையானின் மூன்று நபர்களை ஏ.கே. ரக துப்பாக்கியுடன் நிறுத்தியிருந்தார்.

பிள்ளையான் மற்றும் சித்தா மாஸ்ரர் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்களைச் சுடுவதற்காக இந்த நபர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ப்ள்ளையான் மற்றும் சித்தா மாஸ்ரர், ஜோசப் பரராஜசிங்ம் எம்.பி.யைச் சுட்டுக் கொன்றுவிட்டு வாகனத்தில் ஏறி நேராக சிங்கபுர இராணுவ முகாமுக்கு சென்றார்.

அதன் பின்னர் பிள்ளையான் மூலமாக இந்த செய்தி உடனடியாக உரியவர்களிற்கு சொல்லப்பட்டது.

இந்துக்கள் முடிவு செய்து விட்டனர் பிள்ளையானை நிராகரிப்பது என….

இப்படி நடந்த உண்மைச் சம்பவத்தை கூறிய பின்பும் கிறிஸ்தவர்கள் பிள்ளையானின் கட்சிக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால் நீங்கள் செய்யும் பாவசங்கீத்தனமே வீண்.

கிறிஸ்தவ திருச்சபையின் மிகப் பெரும் அடையாளமாக உள்ள நற்கருணை வழிபாட்டின் போது இச் சம்பவம் இடம் பெற்றது ஒட்டு மொத்த கிறிஸ்தவ திருச்சபைக்கும் மிகப் பெரும் துயர சம்பவமாகும்.

கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் ஆயர் – அருட்தந்தையர்கள் – அருட்சகோதரிகள் – அருட்சகோதரர்கள் அனைவரும் உங்கள் மக்களிற்கு தெளிவாக கூறுங்கள் அரசியல் ரீதியில் உங்களிடம் விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம் அதற்காக பிள்ளையானை தெரிவு செய்ய உங்கள் மக்களின் வாக்கை பயன்படுத்தி கிறிஸ்தவத்தின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தாதீர்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் போது நேரடிச் சாட்சி எம்மிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.