வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!

கொரோனா பரிசோதனைக்காக ரஷ்யாவில் இருந்து வந்த கேரளா பெண், கொரோனா வார்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா(20) இளம்பெண் ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கேரளா கோட்டயம் பகுதிக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், வெளிநாட்டில் இருந்து அவர் வந்ததால், 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அந்த பெண்ணும் 14 நாட்கள் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ருஷ்ணப் பிரியாவிடம் அவரது பெற்றோர்கள் பேச, போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால், நேரில் சென்று பார்த்தனர். கதவை தட்டி திறக்காத கிருஷ்ணப் பிரியாவின் அறை ஜன்னலை உடைத்து பார்த்தனர்.

ஆனால், அங்கு கிருஷ்ணபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கிருஷ்ணபிரியாவிற்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இன்னும் வரவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த போலிசார், அந்த இளம்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரது செல்போன், லேப்டாப் போன்றவற்றை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணபிரியா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.