ஆபத்தான சூழ்நிலையில் பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டடில் அதிகரித்துள்ளதன் காரணமாக பேருந்து உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் மிகவும் முக்கியமானதாக, ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பேருந்துகள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு செயற்படும் பேருந்து உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.