இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த கெஞ்சிய காதலன்… சம்மதிக்காத காதலி! இறுதியில் பறிபோன உயிர்

கோவையில் திடீரென காதலைத் துண்டித்த காதலியிடம் கெஞ்சிய காதலன் இறுதியில் பொறுமையிழந்து கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்(22). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.

இவர் அதே ஊரை சேர்ந்த வேற்று சமூகத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் ஐஸ்வர்யா என்பவரை கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரத்தீஷின் காதலைத் திடீரென துண்டித்த காதலி அவரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து காதலியிடம் பேசுவதற்கு நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றதுடன், தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்தியுள்ளார். ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தையையும் ரித்தீஷ் கத்தியால் தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தந்தை மகள் இருவரின் மகள் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தப்பி ஓடிய ரத்தீஷை தேடி வரும் நிலையில், இந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்தும் வருகின்றனர்.