வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் ரிதீகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் சடலங்கள் மீட்கப்பட்டன.

34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.