செருப்பு பிஞ்சிடும் நாயே… வேலையைப் பார்த்துட்டு போடி! லட்சுமியை தாறுமாறாக பேசிய வனிதா… நடந்தது என்ன?

வனிதாவின் மூன்றாவது திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீட்டரின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேற்று பேசியுள்ளார்.

வனிதா பீட்டர் பாலுடன் வெளியிட்ட காணொளியினை அவதானிக்காத லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எலிசபெத் கூறிய விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவர்கள் வெளியிட்ட காணொளியை அவதானித்து அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறிய லட்சுமி, தங்களுக்கு தேவையான உதவியினை செய்வதாக கூறினார். இதனைக் கேட்ட வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசுவதற்காக அழைத்துள்ளார்.

அப்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் தரக்குறைவாக வனிதா பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா கூறுகையில், லட்சுமி எனக்கு ஆங்கிலம் கற்றுத் தர தேவையில்லை… இரண்டு பேருக்குள்ளும் என்ன நடந்தது என்று தெரியாமல் மூன்றாவதாக மூக்கை நுழைக்கிறது தான் பிரச்சினை.

மிகவும் ஓவராக ரியாக்ஷன் கொடுத்து எதற்கு இந்த சீன் என்றும் விளக்கத்தைக் கூறவும் என்று கூறியதோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியா என்று விடாமல் கேள்விகளைக் கேட்டு லட்சுமியை பேசவிடாமல் ஆதங்கத்தை கொட்டினார்.

என் பிரச்சினையில் வரதுக்கு நீ யாரு… ஒரு கட்டத்தில் லட்சுமியை போடி என்று கூறியதோடு, சொல்வதெல்லம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண மக்களை பேசுற நீ என்னிடம் பேசு, படித்தவள் தானே நீ.. வனிதாவின் பேச்சை நிறுத்தாமல் பேசிய போது மரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க… இந்த குழாயடி சண்டைக்கு நான் வரலை என்று லட்சுமி ராம கிருஷ்ணன் கூறினார்.

ஆனாலும் விடாமல் ஆக்ரோஷமாக பேசிய வனிதா, இரவு 10.30 மணிக்கு உனக்கு என்ன நொட்டுற வேலை என்றும், உன்னை கிழிக்கிறதுக்குத் தான் வந்தேன்.. நீ என்ன பத்தினியா?உன்னுடைய வாழ்க்கையை வெளியே சொன்னால் நாறிவிடும்… இதுமட்டுமல்லாமல் இடையே பயங்கரமாக கெட்ட வார்த்தையை பேசியதோடு, அவரது கணவரையும் தாறுமாறாக பேசியுள்ளார்.

சினிமா டைரக்டரா இருந்த டைரக்ஷன் பண்ணு டி எதற்காக இங்கு வந்து பேசுற… ஒருத்தனுக்கு ஒருத்தி இல்லை… உன்னோட கதையை சொன்னால் வண்டவாளம் ஏறிடும்… முடிந்தால் பதில் சொல்லு டி… கிழித்து தொங்கவிட்டுவிடுவேன்… எல்லா மீடியாவிலும் உட்கார்ந்து கேவலப்படுத்தி விடுவேன்… குப்பை பேச வந்துவிட்டா லைவ்வில்… செருப்பு பிய்ந்துவிடும் நாயே என்று பேசியதால் இறுதியில் லட்சுமி ராமகிருஷ்ணன் போனை கட் செய்துள்ளார்.

வனிதாவின் உண்மை முகத்தினை அவதானித்த ரசிகர்கள், பிரபலங்கள், மக்கள் என அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாகவும், தன்னிடம் ஆதரவு கேட்டு வரும் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கின்றார். தற்போது ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கும் அளவிற்கு வனிதா இவ்வாறு பேசியுள்ளது கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.