வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனுக்கு எமனாக வந்த ரயில்

மட்டக்களப்பு – கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், இருதயபுரத்தினை சேர்ந்த 27 வயதுடைய உதயன் ஜீவேந்திரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத நிலையில் தண்டவாளத்தினூடாக நடந்து சென்ற போதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.